விக்கிரவாண்டியில் கள் இறக்கும் போராட்டம் அறிவிப்பு

Update: 2021-02-01 11:30 GMT

விக்கிரவாண்டியில் கள் இறக்கி சந்தைப்படுத்தும் அறப்போராட்டம் நடத்தவுள்ளதாக தமிழ்நாடு கள் இயக்கம் சங்கத்தின் தலைவர் நல்லசாமி அறிவித்துள்ளார்.

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தில் உள்ள தனியார் மண்டபத்தில் தமிழ்நாடு கள் இயக்கம் சங்கத்தின் தலைவர் நல்லசாமி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, தமிழகத்தில் மட்டும் கள் இறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது . மற்ற மாநிலங்களில் கள் விற்பனை நடைபெற்று வருவதாகவும் தமிழகத்தில் மட்டுமே கள்ளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்த அவர் இவற்றையெல்லாம் வலியுறுத்தி வரும் மார்ச் மாதம் 13-ம் தேதி ஈரோட்டில் கள் விடுதலை மாநாடு நடைபெறும் என அவர் தெரிவித்தார்.

இந்த மாநாடு வரும் தேர்தலை முன்னிறுத்தி நடத்தப்படும் எனவும் இந்த மாநாடு ஒரு திருப்பு முனையை ஏற்படுத்தும் எனவும் அவர் கூறினார். மேலும் வரும் ஆறாம் தேதி விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி நரசிங்கநூரில் கள் இறக்கி சந்தைப்படுத்தும் அறப்போராட்டம் நடைபெறும் எனவும் அவர் தெரிவித்தார்.

Tags:    

Similar News