முட்புதரில் பதுக்கி வைத்து மது விற்பனை; கோபி அருகே வாலிபர் கைது

ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள மேவாணி ஆற்றங்கரை முட்புதரில், மது பாட்டில்களை பதுக்கி வைத்து விற்ற வாலிபரை, போலீசார் கைது செய்தனர்.

Update: 2022-09-16 05:30 GMT

கோபிசெட்டிபாளையம் போலீஸ் ஸ்டேஷன்.

கோபிசெட்டிபாளையம் போலீஸ் எல்லைக்கு உட்பட்ட மேவாணி பகுதியில், நேற்று மாலை போலீசார் ரோந்து சென்றனர். அப்போது, மேவாணி ஆற்றங்கரை முட்புதரில் ஒருவர், சட்டவிரோதமாக மதுபாட்டில்களை பதுக்கி, கூடுதல் விலைக்கு விற்பதற்காக வைத்திருந்தார். உடனே அவரை பிடித்து போலீஸ் ஸ்டேஷன் அழைத்து சென்று விசாரித்தனர். விசாரணையில் அவர், அத்தாணி நஞ்சுண்டாபுரத்தை சேர்ந்த தங்கவேல் மகன் குமரேசன் (31) என தெரியவந்தது. இது குறித்து கோபிசெட்டிபாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, அவரை கைது செய்தனர். மேலும், அவரிடம் இருந்து 10 மதுபான பாட்டில்களை, போலீசார் பறிமுதல் செய்தனர்.

Similar News