அந்தியூர் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் ரூ.2.03 கோடிக்கு பருத்தி ஏலம்

அந்தியூர் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் நடைபெற்ற ஏலத்தில், இரண்டு கோடியே 3 லட்சம் ரூபாய்க்கு பருத்தி விற்பனை செய்யப்பட்டது.

Update: 2022-08-17 13:30 GMT

அந்தியூரில், 2.03   கோடி ரூபாய்க்கு பருத்தி ஏலம் நடந்தது.

ஈரோடு மாவட்டம் அந்தியூர் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் நேற்று முன்தினம், பருத்தி ஏலம் நடைபெற்றது. அந்தியூர் மற்றும் அந்தியூரை சுற்றியுள்ள பல்வேறு கிராமங்களில் இருந்து 5,742 பருத்தி மூட்டைகளை விவசாயிகள் விற்பனைக்காக கொண்டு வந்திருந்தனர்.

இதில் ஒரு கிலோ பருத்தி குறைந்தபட்சமாக 107 ரூபாய் 51 பைசாவிற்கும் அதிகபட்சமாக 126 ரூபாய் 11 பைசாவிற்கும் சராசரியாக 115 ரூபாய் 61 பைசாவிற்கும் விற்பனை செய்யப்பட்டது. மொத்தம் 1898.24 குவிண்டால் பருத்தி, 2 கோடியே 3 லட்சத்து 65 ஆயிரத்து 866 ரூபாய்க்கு ஏலம் போனது என விற்பனை கூடத்தின் கண்காணிப்பாளர் தெரிவித்தார்.

Similar News