அம்மாபேட்டை அருகே பூதப்பாடியில் ரூ.1.93 கோடிக்கு பருத்தி ஏலம்

பூதப்பாடி ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் நடைபெற்ற பருத்தி ஏலத்தில் 1 கோடியே, 93 லட்சம் ரூபாய்க்கு பருத்தி ஏலம் போனது.

Update: 2022-06-25 10:15 GMT
பூதப்பாடி ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் பருத்தி ஏலம் நடைபெற்றது.

ஈரோடு மாவட்டம் அம்மாபேட்டை அருகே உள்ள பூதப்பாடி ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் கடந்த வாரம் முதல் பருத்தி ஏலம் தொடங்கிய நிலையில், நேற்று நடைபெற்ற  ஏலத்திற்கு தருமபுரி,சேலம், கொளத்தூர், கொங்கணாபுரம், மேட்டூர், பெருந்துறை,அந்தியூர், அம்மாபேட்டை மற்றும் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த 750-க்கும் மேற்பட்ட  விவசாயிகள் 4 ஆயிரத்து 899 பருத்தி மூட்டைகளை விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர்.

இதில், 1,820 குவிண்டால் பருத்தி  குறைந்த பட்சமாக 102 ரூபாய் 17 காசுக்கும், அதிகபட்சமாக ரூ.110 ரூபாய் 99 காசுக்கும் ஏலம் போனது. மொத்தம் ரூ.1 கோடியே 93 லட்சத்து 34 ஆயிரத்து 980-க்கு விற்பனையானதாக, விற்பனைக்கூட கண்காணிப்பாளர் சந்திரசேகரன் தெரிவித்தார்.மேலும், கடந்த வாரத்தில் பருத்தி கிலோ 116 ரூபாய் ஏலம் போன நிலையில், நேற்று 111 ரூபாய் வரை ஏலம் போனதால், விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.

Tags:    

Similar News