கடலூரில் மின்கம்பத்தில் அறுந்து தொங்கும் தெரு விளக்கு
அச்சத்துடன் கடந்துசெல்லும் வாகன ஓட்டிகள்- நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை.
கடலூர் கம்மியம்பேட்டை கெடிலம் நகர் பகுதியில் கடந்த 4 நாட்களாக தெருவிளக்கு மின் கம்பத்தின் அருகே தொங்கிய நிலையில் உள்ளது.
எப்பொழுது வேண்டுமானாலும் அறுந்து விழும் நிலையிலுள்ள இந்த தெரு விளக்கு உடனடியாக அகற்ற வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
அந்தப் பக்கம் செல்லும் பாதசாரிகள் எப்பொழுது விழுமோ என்ற அச்சத்தில் கடந்து செல்கின்றனர் பாதிப்பு ஏற்படுவதற்கு முன் மின்சார வாரியம் துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்து உள்ளனர்.