ஈரோடு அருகேயுள்ள கிராமத்தில் வேளாண்துறை சார்பில் வயல் விழா

ஈரோடு வட்டார வேளாண் துறை சார்பில், எலவமலை கிராமத்தில் வயல் விழா நடைபெற்றது

Update: 2023-06-15 11:15 GMT

பைல் படம்

ஈரோடு வட்டார வேளாண் துறை சார்பில், எலவமலை கிராமத்தில் வயல் விழா நடந்தது.

ஈரோடு வேளாண் உதவி இயக்குனர் சாமுவேல் முன்னிலை வகித்து பேசியதாவது:வேளாண் துறை சார்பில் வேளாண் தொழில் நுட்ப மேலாண்மை முகமை மூலம், அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டம் செயல்படும் எலவமலை கிராமத்தில், வயல் விழா கொண்டாடப்படுகிறது.

வேளாண் துறை, அதனை சார்ந்த துறைகளின் திட்டங்கள், நலத் திட்ட உதவிகள் பற்றி அறிய நிகழ்ச்சி நடத்தப்படுகிறது, என்றார்.பவானிசாகர் வேளாண் ஆராய்ச்சி நிலைய பேராசிரியை ஷோபா, கால்நடை பல்கலை கழக ஆராய்ச்சி நிலைய பேராசிரியர் ஹரிஹரன், பேராசிரியர் தினேஷ், சந்திரசேகரன் உட்பட பலர் பல்வேறு துறை சார்ந்த  பயனுமள்ள கருத்துகளை விவசாயிகளுக்கு தெரிவித்தனர்.

ஏற்பாடுகளை வட்டார தொழில் நுட்ப மேலாளர் கிருத்திகா, உதவி தொழில் நுட்ப மேலாளர் மணிகண்டன் ஆகியோர் செய்தனர்.உதவி வேளாண் அலுவலர்கள் குமார், சுந்தரராஜ், ரஞ்சித்குமார், சுலோசனா ஆகியோர் பங்கேற்றனர்.

தாவரங்களை பயிரிட்டு வளர்க்கும் நிலப் பரப்பு வயல் எனப்படும். அப்படி செய்யப்படும் தொழில் வேளாண்மை எனப்படும். தொன்று தொட்டு நெல் முதலான உணவுப் பயிர்களையும், பருத்தி முதலான பணப் பயிர்களையும் வளர்க்கும் நிலப்பகுதிகளையே வயல் எனக் குறித்தனர். தற்காலத்தில் சில வகை எரிபொருள்களை உற்பத்தி செய்யும் இடங்களையும் வயல் என அழைக்கின்றனர்.

பண்டைத் தமிழகத்தில் வயலும் வயல் சார்ந்த இடமும் மருதம் என அழைக்கப்பட்டது. விளைந்திருக்கும் பயிர்களுக்கு இடையே மாந்தர் நடந்து செல்வதற்கு பாதைகள் அமைக்கபட்டிருக்கும். அவற்றை வரப்புகள் என்றழைப்பர். சில வட்டாரங்களில் வயலைக் குறிக்கத் 'தோப்பு', 'தோட்டம்', 'காடு' போன்ற சொற்களையும் பயன்படுதுகிறார்கள். நன்கு செழித்து வளர்ந்த பயிர்களைக் கொண்ட வயல்கள் கண்களுக்கும் மனதிற்கும் இதமளிக்கும் உன்னதமான காட்சிகளாகும். வெவ்வேறு மண்ணுக்கு ஏற்றவாறு சிறப்புத் தொழில் நுட்பங்களை உபயோகித்து நடவு வயல் தயாரிக்கப்படுகிறது

Tags:    

Similar News