கடலூர் அருகே தனியார் ஏடிஎம் மையத்தில் ரூ 9 லட்சம் பணம் திருட்டு

கடலூர் அருகே தனியார் ஏடிஎம் மையத்தில் பணம் வைத்த நபரே பணத்தை திருடியவர் கைது 6 லட்சத்து 90 ஆயிரம் பறிமுதல்

Update: 2022-03-18 17:01 GMT

 ஏடிஎம் மிஷினில் இருந்து  பணத்தை திருடிய கிருஷ்ணகுமார் என்பவரிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட பணம்

கடலூர் அடுத்த கே.என் பேட்டை பகுதியில் உள்ள தனியார் ஏடிஎம் மையத்தில் நேற்று காலை வைக்கப்பட்ட நிலையில் இரவு பணம் திருடு போய் இருப்பதாக திருப்பாதிரிப்புலியூர் காவல் நிலையத்திற்கு புகார் வந்தது.அதன் அடிப்படையில் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர்.

ஏடிஎம் மையத்தில் இருந்து 9 லட்சம் பணம் களவு போய் இருப்பதாக மேற்பார்வையாளர் ராஜா என்பவர் திருப்பாதிரிப்புலியூர் காவல்நிலையத்தில் புகார் கொடுத்திருந்தார். அதன் அடிப்படையில் காவல்துறையினர் அவரிடம் மேலும் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

ஏ.டி.எம் மையத்திற்கு பணத்தை நிரப்புவதற்காக பணத்தைக் கொண்டு சென்ற நான்கு நபர்களிடம் விசாரித்த போது கிருஷ்ணகுமார் என்பவர் பணத்தை திருடியதை ஒப்புக்கொண்டார்.  நேற்று மாலை சக ஊழியருடன் ஏடிஎம்மில் பணம் நிரப்ப சென்றதாகவும் அந்த ஏடிஎம் மையத்தில் சிசிடிவி கேமரா எதுவும் இல்லாததால் இரவு நேரத்தில் அந்த ஏடிஎம் மையத்திற்கு சென்று பணத்தை எடுத்ததாக ஒப்புக்கொண்டார்.

நெல்லிக்குப்பம் அருகில்  விஸ்வநாதபுரம் கிராமத்தைச் சேர்ந்த கிருஷ்ணகுமாரிடமிருந்து  ஆறு லட்சத்து 90 ஆயிரம் ரூபாய் பணம் கைப்பற்றப்பட்டது. மீதமுள்ள பணத்தை அவர் என்ன செய்தார் என்பதை விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags:    

Similar News