ஜெய்பீம் விவகாரம்: நடிகர் சூர்யா மன்னிப்பு கேட்க வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்

நடிகர் சூர்யா மன்னிப்பு கேட்க வேண்டும்-விருத்தாச்சலம் முதனை கிராம மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2021-11-21 17:00 GMT

நடிகர் சூர்யா மன்னிப்பு கேட்க வேண்டுமென வலியுறுத்தி விருத்தாச்சலம் முதனை கிராம மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இயக்குனர் ஞானவேல் இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிப்பில் அமேசான் ஓடிடி தளத்தில் வெளிவந்துள்ள ஜெய்பீம் என்ற திரைப்படம் வெளிவந்த நாள் முதல் பல விவாதங்களை சந்தித்து வருகிறது. 

விருத்தாசலம் அடுத்த முதனை கிராமத்தில் நடந்த உண்மை சம்பவத்தை வைத்து படமெடுத்த சூர்யா, சாதிய வன்முறையை தூண்டும் வகையில் படத்தில் காட்சிகளை அமைத்துள்ளதாகவும், இது முதனை கிராம மக்களிடையே வன்முறையை தூண்டும் விதமாக இருப்பதாகவும் குறி திடீர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மேலும் நடிகர் சூர்யா மற்றும் ஜெய்பீம் திரைப்பட இயக்குனர் ஞான வேல் மற்றும் தயாரிப்பாளர்கள் முதனை கிராம மக்களிடம் மன்னிப்புக் கேட்க வேண்டும் என்ற  கோரிக்கையை வலியுறுத்தி  முதனை கிராமத்தில் உள்ள 200க்கும் மேற்பட்ட பொதுமக்கள்  ஆர்ப்பாட்டம் நடத்தினர். தூண்டாதே தூண்டாதே வன்முறையை என முழக்கமிட்டனர்.நடிகர் நடிகர் சூர்யா மன்னிப்பு கேட்காவிடில் தொடர்ந்து போராட்டம் நடத்துவோம் எனவும் கிராம மக்கள்  தெரிவித்துள்ளனர்



Tags:    

Similar News