கடலூரில் தடுப்பூசி போடும் பணிகள் தீவிரம்
கடலூரில் தமிழ்நாடு வணிக சங்க பேரவை சார்பில் கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்றது.
கடலூரில் கடலூரில் உள்ள தமிழ்நாடு வணிக சங்க பேரவை சார்பில் வணிக சங்க பேரமைப்பு தலைவர் துரைராஜ் அவர்களின் கிருஷ்ணாலயா சினிமா தியட்டர் அரங்கில் தடுப்பூசி முகாம் அமைக்கப்பட்டது.
அங்கு அரசு சார்பில் வழங்கப்பட்ட 600 தடுப்பூசிகள், கடலூர் சட்டமன்ற உறுப்பினர் கோ.ஐயப்பன் தலைமையில் சுமார் 600க்கும் மேற்பட்ட பொதுமக்களுக்கு போடப்பட்டது
தடுப்பூசி போட வந்திருந்த பொதுமக்களிடம் ஆதார் எண்கள் பெறப்பட்டு பின்னர் தடுப்பூசி போடப்பட்டன.