ஒரேநாளில் பேரைட்ஸ் தனிமத்தை அதிகளவில் கையாண்டு எம்.வி.ஆர்.பி. எடன் கப்பல் சாதனை

சென்னை துறைமுகம் மே 31-ம் தேதியன்று, ஒரேநாளில் 45,200 டன் பேரைட்ஸ் தனிமத்தை அதிகளவில் கையாண்டு சாதனைப் படைத்துள்ளது.

Update: 2022-06-02 02:48 GMT

சென்னை துறைமுகம் மே 31-ம் தேதியன்று, ஒரேநாளில் 45,200 டன் பேரைட்ஸ் தனிமத்தை அதிகளவில் கையாண்டு சாதனைப் படைத்துள்ளது. இந்த சாதனையை எம்.வி.கௌஸ்டா என்ற கப்பல் 38,079 பேரைட்ஸ் தனிமங்களை கையாண்டு சாதனைப் படைத்தது. இந்த சாதனையை எம்.வி.ஆர்.பி. எடன் என்ற கப்பல் தற்போது முறியடித்துள்ளது.

இந்த சாதனையைப் படைத்த எவர்வின் ஷிப்பிங் ஏஜென்சியின் முகவர் சிவசண்முகா, டயானா போக்குவரத்து மற்றும் ஏற்றுமதியாளர் மற்றும் ட்ரைமேக்ஸ் நிறுவன அதிகாரிகள் மற்றும் ஊழியர்களுக்கு சென்னை துறைமுக பொறுப்புக் கழகத் தலைவர் சுனில் பாலிவால் பாராட்டுகளை தெரிவித்தார்.

Similar News