சட்டப்பேரவை தற்காலிக தலைவராக கு.பிச்சாண்டி நியமனம்.
KU. Pichandi-தமிழக சட்டப்பேரவையின் தற்காலிக தலைவராக கு.பிச்சாண்டி நியமனம்.
KU. Pichandi-தமிழக சட்டப்பேரவையின் தற்காலிக சட்டப்பேரவைத் தலைவராக கு.பிச்சாண்டி நியமனம் செய்யப்பட்டுள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.
தமிழக சட்டப்பேரவையின் முதல் கூட்டம் மே 11ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில் அந்த கூட்டத்தில் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள தமிழக சட்டப்பேரவை உறுப்பினர்கள் பதவி ஏற்க உள்ளனர். ஆகவே அவர்களுக்கு பதவி பிரமாணம் செய்து வைக்க தற்காலிக சட்டப்பேரவைத் தலைவராக கீழ்பெண்ணத்தூர் தொகுதியில் வெற்றி பெற்ற கு.பிச்சாண்டியை நியமனம் செய்துள்ளனர். எம்.எல்.ஏ.க்கள் பதவியேற்ற பின், மே 12ஆம் தேதி புதிய சட்டப்பேரவைத் தலைவரை தமிழக அரசு தேர்வு செய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2