சென்னையில் தரை இறங்கிய பிரான்ஸ் போர்விமானம்

எரிபொருள் நிரப்புவதற்காக, பிரான்ஸ் நாட்டு விமானப்படை போா் விமானம், சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் தரை இறங்கியது.

Update: 2022-09-19 16:10 GMT

சென்னையில் தரையிறங்கிய பிரான்ஸ் போர் விமானம்.

பிரான்ஸ் நாட்டு விமானப்படை போர் விமானம், மணிக்கு 880 கிலோ மீட்டர் வேகம் பறக்கும் திறன் கொண்டது. இது ஏர்பஸ் நிறுவனத்தின் 'ஏ-400 எம்.அட்லஸ்' என்ற வகையைச் சேர்ந்தது. இந்த விமானம் ராணுவத்துக்காக வடிவமைக்கப்பட்டது. வானில் பறந்தபடி மற்றொரு விமானத்துக்கு எரிபொருள் நிரப்பும் வசதிகள் உடையது. முறையான விமான ஓடுபாதை இல்லாத இடத்தில் கூட இந்த விமானத்தை தரையிறக்க முடியும். கனரக ஹெலிகாப்டர், போர் வாகனங்களை இதில் எடுத்துச்செல்ல முடியும்.

மேலும் பேரிடர் காலங்களில் மீட்பு பணிகளிலும் இந்த விமானம் பயன்படுத்தக்கூடியது.

இந்நிலையில், பிரான்ஸ் நாட்டு விமானப்படை போா் விமானம், சிங்கப்பூரில் இருந்து அபுதாபி நோக்கி சென்றது. விமானத்தில் எரிபொருள் நிரப்ப வேண்டி இருந்ததால், சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் தரை இறங்கியது. எரிபொருள் நிரப்பிய பின், பிரான்ஸ் நாட்டு விமானப்படை விமானம், அபுதாபிக்கு புறப்பட்டுச் சென்றது.

Similar News