செங்கல்பட்டு அருகே ரவுடியை பழிவாங்க நாட்டு வெடிகுண்டு, தயாரித்த இளைஞர்கள் கைது

செங்கல்பட்டு அருகே நண்பரை கொலை செய்த ரவுடியை. பழிவாங்க நாட்டு வெடிகுண்டுகளை தயாரித்து சதித் திட்டம் தீட்டிய இளைஞர்களை போலீசார் கைது செய்தனர்.

Update: 2021-07-29 05:30 GMT

ரவுடியை பழிவாங்க இளைஞர்கள் தயாரித்த நாட்டு வெடிகுண்டு

செங்கல்பட்டு மாவட்டம் ஒரகடம்-திருகச்சூர் செல்லும் சாலையில் மறைமலைநகர் காவல் ஆய்வாளர் ராஜாங்கம் மற்றும் குற்றப்பிரிவு ஆய்வாளர் தனசேகரன் சம்பவத்தன்று  இரவு தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டிருந்துள்ளனர்,

அப்போது பல்சர் பைக்கில் வந்த 3 இளைஞர்களை மடக்கிப்பிடித்து காவல் ஆய்வாளர் ராஜாங்கம் விசாரணை நடத்திய போது அந்த இளைஞர்கள் முன்னுக்கு பின் முரணாக பேசியதால் சந்தேகம் அடைந்தார்.

அப்போது போலீசார் அவர்கள் கொண்டு வந்த இருசக்கர வாகனத்தை சோதனை நடத்தினர். சோதனையின் போது பைக்கில் மறைத்து வைத்திருந்து 2 நாட்டு வெடிகுண்டுகளை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

பின்னர் காவல்துறையினர், அவர்களை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று அவர்களிடம் விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில், செங்கல்பட்டு மாவட்டம் காட்டாங்குளத்தூரில் கடந்த 3 வருடங்களுக்கு முன்பு தனசேகர் என்ற ரவுடிக்கும் பூச்சி இரத்தினம் சபாபதி என்பவருக்கும் ஏற்பட்ட கஞ்சா விற்பனை தொடர்பான போட்டியில் பூச்சி ரத்தினசபாபதி, தனசேகரனை ஓட ஓட விரட்டி தலையை துண்டித்து நடுரோட்டில் வீசியுள்ளார்.

இதனைப் பொறுக்க முடியாத அவரது கூட்டாளியான கிஷோர் (20) பூச்சி ரத்தினசபாபதியை 3 வருடங்களாக காத்திருந்து ஒரு திட்டம் தீட்டி நாட்டு வெடிகுண்டு தயாரிக்கும் அழகேசன் என்பவரிடம் ஒன்றிணைந்து பூச்சி ரத்தினசபாபதியை தீர்த்துக்கட்ட திட்டம் தீட்டி இரண்டு நாட்டு வெடிகுண்டுகளுடன் கிஷோர் அழகேசன் மற்றும் அவரது நண்பரான சிவன்குமாருடன் சென்ற போது கையும் களவுமாக போலீசாரிடம் சிக்கியுள்ளனர்.

வெடிகுண்டுகளுடன் சிக்கிய 3 நபர்கள் மீது வழக்குப்பதிவு செய்து செங்கல்பட்டு நீதிமன்றத்தில் நீதிபதிமுன் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.

Tags:    

Similar News