மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்கல்

கீரப்பாக்கம் ஊராட்சியில், தனியார் தொண்டு நிறுவனம் சார்பில், மக்களுக்கு வெள்ள நிவாரணப்பொருட்கள் வழங்கப்பட்டது.

Update: 2021-11-17 06:30 GMT

 "மெட்ராஸ் ரவுண்ட் டேபிள்" என்ற தொண்டு நிறுவனத்தின் சார்பில்,  நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டது.

செங்கல்பட்டு மாவட்டம், கூடுவாஞ்சேரி அடுத்துள்ள கீரப்பாக்கம் ஊராட்சியில்,  கடந்த வாரம் பெய்த கன மழை காரணமாக வெள்ள நீர் வீடுகளுக்குள் புகுந்தது. இதனால் கடுமையாக பாதிக்கப்பட்ட கன்னியம்மன் கோயில் தெரு, விநாயகபுரம் மக்களுக்கு "மெட்ராஸ் ரவுண்ட் டேபிள்" என்ற தொண்டு நிறுவனத்தின் சார்பில், நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டது.

கீரப்பாக்கம் ஊராட்சி மன்ற தலைவர் செல்வசுந்தரி ராஜேந்திரன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், சட்டமன்ற உறுப்பினர் வரலட்சுமி மதுசூதனன்,   சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு,  அரிசி, மளிகை பொருட்கள்,  காய்கறிகள் மற்றும் போர்வை உள்ளிட்ட நிவாரண பொருட்களை வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில், காட்டாங்குளத்தூர் வடக்கு ஒன்றிய செயலாளரும் ஒன்றியக்குழு துணை பெருந்தலைவருமான ஆராமுதன், காட்டாங்கொளத்தூர் ஒன்றியக்குழு பெருந்தலைவர் உதயா கருணாகரன், ஒன்றிய குழு உறுப்பினர் விஜயகுமார், மற்றும் பள்ளி தலைமையாசிரியர் பாபு, ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் இளங்கோவன்,. ஊராட்சி துணைத் தலைவர் வார்டு உறுப்பினர்கள் மற்றும் நிர்வாகிகள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News