மறைமலை நகர் அருகே ஆட்டோ ஓட்டுனர் இருமகள்களுடன் கிணற்றில் சடலமாக மீட்பு

செங்கல்பட்டு மறைமலை நகர் அருகே ஆட்டோ ஓட்டுனர் இருமகள்களுடன் கிணற்றில் சடலமாக மீட்பு, தற்கொலையா என காவல்துறை விசாரணை

Update: 2022-01-19 08:15 GMT

மறைமலைநகரில் மீட்கப்பட்ட உடல்கள் 

சென்னை புதுப்பேட்டை பச்சையப்பன் முதலி தெருவை சேர்ந்த ஆட்டோ ஓட்டுநரான ஞானவேல்( வயது-44) இவர் மனைவி ஜெயந்தி (வயது-38) இவர்களுக்கு ஐஸ்வர்யா( வயது-5) பூஜா (வயது-3) என இரண்டு மகள்கள் உள்ளனர், 

ஞானவேல் கடந்த 15 ம் தேதி முதல் இருமகள்களுடன் ஆட்டோவில் சென்றவர் வீடு திரும்பவில்லை. இந்நிலையில் அவர் மனைவி ஜெயந்தி எழும்பூர் காவல் நிலைத்தில் நேற்று 18ம் தேதி தன் கணவரையும் குழந்தைகளையும் காணவில்லை என புகார் அளித்தார்.

இந்த நிலையில் செங்கல்பட்டு அடுத்த மறைமலை நகர் கடம்பூர் எனும் கிராமத்தில் கிணறு அருகே ஆட்டோ ஒன்று நின்று கொண்டிருப்பதாகவும்,   அருகே  உள்ள விவசாய கிணற்றில் இறந்த நிலையில்  இரண்டு சிறுமிகளுடன் ஒரு நபர் இறந்த நிலையில் மிதப்பதாகவும்  அக்கம் பக்கத்தினர் காவல்துறைக்கு தகவல் தெரிவித்ததை அடுத்து சடலங்களை மீட்டு விசாரணை மேற்கொண்டனர். 

விசாரணையில் இறந்துபோனது எழும்பூரில் காணமல் போன ஞானவேல் மற்றும் அவரது குழந்தைகள் என தெரியவந்தது. குடும்ப பிரச்சினை காரணமாக தற்கொலை செய்து இருக்கலாம் என்கிற கோணத்தில் மறைமலைநகர் காவல்துறையினர் விசாரணை செய்து வருகிறார்கள்.

Tags:    

Similar News