செங்கல்பட்டு பாலாற்றில் சிக்கி அடித்துச் செல்லப்பட்ட மூவரை தேடும் பணி தீவிரம்

செங்கல்பட்டு பாலாற்றில் சிக்கி அடித்துச் செல்லப்பட்ட மூவரை தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

Update: 2021-12-26 02:30 GMT

பாலாற்றில் அடித்துச் செல்லப்பட்ட மூவர்.

கடந்த மாதம் பெய்த கனமழையின் காரணமாக செங்கல்பட்டு அருகே உள்ள பாலாற்றில் வெள்ள நீர் சென்று வருகிறது.

இதன் காரணமாக ஆற்றில் துணி துவைக்கவோ, குளிக்கவோ மற்றும் புகைப்படம் எடுக்கவோ மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது. இந்நிலையில் நேற்று பிற்பகலில் கிறிஸ்துமஸ் விடுமுறை தினத்தை முன்னிட்டு சென்னை திரிசூலம் பகுதியைச் சேர்ந்த பத்துக்கும் மேற்பட்டோர் இருங்குன்றம்பள்ளியில் உள்ள பாலாற்றில் குளிக்க வந்துள்ளனர்‌.

அனைவரும் குளித்துக் கொண்டிருக்கும் போது எதிர்பாராத விதமாக மூன்று பேர் சுழலில் சிக்கி பாலாற்றில் அடித்துச் செல்லப்பட்டனர். இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த தீயணைப்பு துறையினர் பால் ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டவர்கள் தேடி வருகின்றனர்.

மேலும் சம்பவ இடத்திற்கு வந்த செங்கல்பட்டு தாலுகா போலீசார் நடத்திய முதல்கட்ட விசாரணையில் அடித்துச் செல்லப்பட்ட மூவரும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் என்பதும், திரிசூலம் பகுதியில் மளிகை கடை நடத்தி வரும் லியோன்சிங் ராஜா -38. அவரது மகள் 12-ஆம் வகுப்பு படித்து வரும் பெர்சி -16, அவரது அண்ணன் சேகரின் மகன் லெனின்ஸ்டன்-20 என்பதும் தெரியவந்துள்ளது.  தொடர்ந்து 3மணி நேரமாக தீயணைப்புத்துறையினர் தேடி வருகின்றனர்.

Tags:    

Similar News