செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் மாணவர்கள் உள்ளிருப்பு போராட்டம்

செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் முதுநிலை மருத்துவ மாணவர்கள் உள்ளிருப்பு போராட்டம்.

Update: 2021-12-01 05:15 GMT

செங்கல்பட்டு அரசு மருத்துவக்கல்லூரியில் மாணவர் சேர்க்கை தொடங்க வலியுறுத்தி கல்லூரி மாணவர்கள் போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.

செங்கல்பட்டு அரசு மருத்துவக்கல்லூரியில் மாணவர் சேர்க்கை தொடங்க வலியுறுத்தி கல்லூரி மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இந்த ஆண்டிற்கான மாணவர் சேர்க்கை குரோனா நோய்தொற்று உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் தள்ளிப் போகின்றது இதனால் 100 சதவிகிதம் மருத்துவர்கள் இருக்க வேண்டிய நிலையில் தற்போது 65 சதவீதம் மருத்துவர்கள் மட்டுமே பணியில் ஈடுபட்டு வரும் சூழ்நிலை உள்ளது.

இதனால் தங்களுக்கு பணிச்சுமை அதிக அளவில் உள்ளதாகவும், இதனை கருத்தில் கொண்டு அரசு கல்லூரி உடனடியாக மாணவர் சேர்க்கைக்கான கவுன்சிலின் முறையை துரிதப்படுத்த கோரி வகுப்பை புறக்கணித்து அமைதியான முறையில் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

நீட் தேர்வு முடிவடைந்து தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டிருக்கும் நிலையில் மத்திய அரசு உடனடியாக கவுன்சிலிங் முறையில் மாணவர்களை தேர்வு செய்து வகுப்புகளை தொடங்க வேண்டுமென கண்டன முழக்கங்களை முன்வைத்து செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரி முதுநிலை மாணவர்கள் 30க்கும் மேற்பட்டோர் வகுப்புகளைப் புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Tags:    

Similar News