வண்டலூர் பூங்காவில் பாம்புகள் இருப்பிடம், சிறுவர் பூங்கா இன்று திறப்பு

வண்டலூர் பூங்காவில் பாம்புகள் இருப்பிடம், சிறுவர் பூங்கா இன்று திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

Update: 2022-04-22 06:12 GMT

வண்டலூர் உயிரியல் பூங்கா (பைல்படம்).

சென்னை வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் மூடப்பட்ட பார்வையாளர்கள் காணும் இருப்பிடங்கள் படிப்படியாக பார்வையாளர்களுக்காக திறக்கப்படும் என பூங்கா நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளது.

அதன்படி 22.04.2022 அதாவது இன்று முதல் பாம்புகள் இருப்பிடம்- ஊர்வன இல்லம், இரவு விலங்குகள் இருப்பிடம் மற்றும் சிறுவர் பூங்கா ஆகியவை முதல் கட்டமாக கொரோனா காலகட்டத்திற்கு பிறகு பொதுமக்களுக்கு பார்வைக்காக  திறக்கப்படுகின்றது.

குழந்தைகளுக்கு மிகவும் பிடித்தமான இடங்களில் ஒன்றான சிறுவர் பூங்கா வார நாட்களில் மட்டும் பார்வையாளர்களுக்காக திறந்திருக்கும். வார இறுதி நாட்களான சனி, ஞாயிறு மற்றும்  பொது விடுமுறை நாட்களில் சிறுவர் பூங்காவிற்கு அனுமதியில்லை என தெரிவித்துள்ளனர். 

Tags:    

Similar News