செங்கல்பட்டு அருகே குடோனில் பதுக்கி வைத்திருந்த 15 டன் குட்கா பறிமுதல்

செங்கல்பட்டு அருகே குடோனில் பதுக்கி வைத்திருந்த 15 டன் குட்காவை போலீசார் பறிமுதல் செய்தனர்.

Update: 2021-09-27 07:15 GMT

கோப்பு படம்

செங்கல்பட்டு மாவட்டம், மறைமலைநகர் அடுத்த ரயில் நகர் பகுதியில் தனியாருக்கு சொந்தமான குடோனில் சந்தேகத்திற்கிடமான முறையில் லாரிகள் வந்து செல்வதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. தகவல் கிடைத்தவுடன் காவல்துறையினர் தொடர்ந்து அப்பகுதியை நோட்டமிட்டு வந்தனர்.

இந்நிலையில் கர்நாடகத்தைச் சேர்ந்த கனரக வாகனம் சந்தேகத்திற்கு இடமான வகையில் அப்பகுதியில் நின்றுள்ளது. இதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் குடோனில் சோதனை செய்ததில், சுமார் 50 லட்சம் மதிப்பிலான 15 டன் எடையுள்ள குட்கா பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

மேலும், குடோனில் இருந்த படப்பை மணிகண்டன், மாரிமுத்து, பெங்களூரை சேர்ந்த பெருமாள், ஆனந்த், ராஜஸ்தான் பகுதியை சேர்ந்த நரேஷ் குமார், டாம்மரம், ஆகிய ஆறு நபர்களை கைது செய்தனர். இந்த குட்கா பொருட்கள் அனைத்தும் பாடி கண்ணன் என்பவருக்கு சொந்தமானது என்பது தெரியவந்துள்ளது.

இவர் மீது குன்றத்தூர், அம்பத்தூர், ரெட்ஹில்ஸ் உள்ளிட்ட பல்வேறு காவல் நிலையங்களில் போதை பொருள் கடத்தல் வழக்குகள் நிலுவையில் உள்ளதும், ஏற்கனவே குண்டர் சட்டத்தில் சிறைக்கு சென்று வந்துள்ளார். கூடுவாஞ்சேரியில் இவருக்கு சொந்தமான குடோனில் கடந்த 15-நாட்களுக்கு முன்பு 10-டன் மதிப்புள்ள குட்கா பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News