ஊரக உள்ளாட்சித் தேர்தல்: கலெக்டர் அலுவலகத்தில் ஆலோசனை கூட்டம்
ஊரக உள்ளாட்சித் தேர்தலையொட்டி, செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
செங்கல்பட்டு மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள கூட்டரங்கில், தேர்தல் அலுவலர் ஆ.ர.ராகுல்நாத் முன்னிலையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையத்தால் நியமனம் செய்யப்பட்ட பிற்படுத்தப்பட்டோர், மாவட்ட தேர்தல் பற்படுத்தடோர் சிறப்பு செயலாளர் மற்றும் ஊரக சிறுபான்மையினர் நலத்துறை அரசு உள்ளாட்சித் தேர்தல் பார்வையாளர் வெ.சம்பத் தலைமையில் தேர்தல் நடத்தும் அலுவலர்களுடான ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது.
இக்கூட்டத்தில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விஜயகுமார், புனித தோமையர்மலை ஆணையர் அருண் பாலகோாபாலன், மாவட்ட வருவாய் அலுவலர் இரா.மேனுவல்ராஜ், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் செல்வகுமார் உதவி மகளிர் திட்ட இயக்குநர் ஸரீதர் ஆகியோர் கலந்து கொண்டனர்.