பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஓய்வு பெற்ற சத்துணவு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

செங்கல்பட்டில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஓய்வு பெற்ற சத்துணவு ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2021-09-13 13:01 GMT

செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் போராட்டத்தில் ஈடுபட்ட ஓய்வுபெற்ற சத்துணவு ஊழியர்கள் சங்கத்தினர். 

குறைந்தபட்ச ஓய்வூதியம் ரூ. 7850ஐ அகவிலைப்படியுடன் வழங்கிட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு சத்துணவு மற்றும் அங்கன்வாடி சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் இன்று சங்கத்தின் மாவட்ட செயலாளர் பி.வி.ராமமூர்த்தி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் குடும்ப ஓய்வூதியம், மருத்துவப்படி, மருத்துவ காப்பீடு, ஈமகாரியத்திற்கு ரூபாய் 50 ஆயிரம், இலவச பேருந்து அட்டை, ஓய்வுக்கால பணிக்கால பலன்களை உடனடியாக வழங்கவேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

கோரிக்கைகளை விளக்கி மாவட்ட நிர்வாகிகள் ராமலிங்கம், சசிரேகா, தேவி, சத்துணவு ஊழியர் சங்கத்தின் மாவட்டத் தலைவர் கே.பாபு, அனைத்து துறை ஓய்வூதியர்கள் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் பி.பன்னீர் செல்வம், வட்டத் தலைவர் ஒ.செல்வமணி உள்ளிட்ட பலர் பேசினர்.

Tags:    

Similar News