செங்கல்பட்டு இராமகிருஷ்ணா குழுமப்பள்ளி சார்பில் தேசிய இளைஞர் தினவிழா

செங்கல்பட்டு இராமகிருஷ்ணா குழுமப்பள்ளி சார்பில் தேசிய இளைஞர்கள் தினவிழா சிறப்பாக கொண்டாடப்பட்டது.

Update: 2022-01-20 08:05 GMT

செங்கல்பட்டு இராமகிருஷ்ணா பள்ளியில்  தேசிய இளைஞர் தின விழா கொண்டாடப்பட்டது.

தேசிய இளைஞர்கள் தினத்தை முன்னிட்டு சுவாமி விவேகானந்தரின் திரு உருவ படத்திற்கு இராமகிருஷ்ண குழுமப்பள்ளியின் சார்பில் மரியாதை செலுத்தினர். செங்கல்பட்டில் இயங்கிவரும் இராமகிருஷ்ண மிஷன் மற்றும் இராமகிருஷ்ண குழும பள்ளியின் சார்பில் வருடாந்திரம்தோறும் தேசிய இளைஞர்கள் தினம் கொண்டாடப்படுவது வழக்கம்.

அதனடிப்படையில் இராமகிருஷ்ண குழுமப்பள்ளியின் செயலர் சுவாமிஜீ தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் இரயில் நிலைய மேலாளர் சுரேஷ் முன்னிலையில் இந்த ஆண்டும் கொரொனா கட்டுபாட்டு வழிமுறைகளுடன் செங்கல்பட்டு இரயில் நிலையத்தில் இளைஞர்கள் தின விழா கொண்டாடப்பட்டது.

இதில் ஏராளமானமோர் கலந்துகொண்டு சுவாமி விவேகானந்தரின் திரு உருவ படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினர். இதனை தொடர்ந்து, இராமகிருஷ்ணா பள்ளியில் உள்ள சுவாமி விவேகானந்தரின் திரு உருவச் சிலைக்கு சுவாமிஜீ, சாதுக்கள், பள்ளியின் ஆசிரியர்கள், மற்றும் பொதுமக்கள் மலர்தூவி மரியாதை செலுத்தினர்.

Tags:    

Similar News