செங்கல்பட்டு மாவட்டத்தில் நேற்று பதிவாகிய மழை நிலவரம்

செங்கல்பட்டு மாவட்டத்தில் நேற்று 187.6 மி.மீ. மழை பதிவாகி உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Update: 2021-10-13 07:45 GMT

பைல் படம்.

செங்கல்பட்டில் கடந்த 24 மணிநேரத்தில் பெய்த மழை காரணமாக மாவட்டம் முழுவதும் 187.6 மி.மீ. மழை பதிவாகி உள்ளது. தமிழகத்தில் வெப்பசலனம் மற்றும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக மழை பெய்யும் என வானிலை மையம் அறிவித்திருந்தது. அதன்படி செங்கல்பட்டில் நேற்று மாலை 4 மணியிலிருந்து மழை பெய்யத் தொடங்கியது. தொடா்ந்து சுமாா் 4 மணி நேரத்துக்கும் மேலாகப் பரவலாக மழை பெய்தது.

மாலை 4 மணி முதல் மாலை 8 மணி வரை மழை காரணமாக செங்கல்பட்டு, மதுராந்தகம், திருப்போரூர், சோழிங்கநல்லூர், பல்லாவரம், கேளம்பாக்கம் புதிய பேருந்து நிலையம், பழைய பேருந்து நிலையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மழைநீா் பெருக்கெடுத்து ஓடியது.

செங்கல்பட்டு மாவட்டத்தில் நேற்று பெய்த மழை அளவு விவரம்: 

செங்கல்பட்டு- 65, மி.மீ, திருப்போரூர்-13, மி.மீ, திருக்கழுக்குன்றம்-46 மி.மீ, மாமல்லபுரம்-5.2. மி.மீ, மதுராந்தகம்-20 மி.மீ, செய்யூர்-14, மி.மீ, தாம்பரம்- மழை பெய்யவில்லை, கேளம்பாக்கம்- 24.4 மி.மீ, மழை என மாவட்டத்தில் மொத்தம் 187.6 மி.மீ. மழை பதிவாகி உள்ளது

Tags:    

Similar News