செங்கல்பட்டு மாவட்டத்தில் 24 மணிநேரத்தில் 424.2 மி.மீ. மழைப்பதிவு

செங்கல்பட்டு மாவட்டத்தில் தொடர்ந்து மழை பெய்து வரும் நிலையில், 24 மணிநேரத்தில் 424.2 மி.மீ. மழை பதிவாகி உள்ளது.

Update: 2021-11-03 03:00 GMT

தமிழகத்தில்,  வெப்பச்சலனம் மற்றும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக மழை பெய்து வருகிறது. செங்கல்பட்டு மாவட்டத்தில் நேற்றிரவு 10 மணியில் இருந்து மழை பெய்யத் தொடங்கியது. தொடா்ந்து சுமாா் 7 மணி நேரத்துக்கும் மேலாகப் விடிய விடிய பரவலாக கனமழை பெய்து வருகிறது.

இரவு 10 மணி முதல்,  இன்று காலை வரை மழை பெய்து வருகிறது. செங்கல்பட்டு, மதுராந்தகம், திருப்போரூர், சோழிங்கநல்லூர், பல்லாவரம், கேளம்பாக்கம் புதிய பேருந்து நிலையம், பழைய பேருந்து நிலையம், உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மழைநீா் பெருக்கெடுத்து ஓடியது.

செங்கல்பட்டு மாவட்டத்தில் நேற்று பெய்த மழை அளவு விவரம் (மி.மீட்டரில்): செங்கல்பட்டு- 38, மி.மீ, திருப்போரூர்-38, மி.மீ, திருக்கழுக்குன்றம்-53.2 மி.மீ, மாமல்லபுரம்-68. மி.மீ, மதுராந்தகம்-61 மி.மீ, செய்யூர்-53, மி.மீ, தாம்பரம்- 60.8,மி.மீ, கேளம்பாக்கம்- 52.2 மழை என மாவட்டத்தில் மொத்தம் 424.2 மி.மீ. மழை பதிவாகி உள்ளது

Tags:    

Similar News