கூடுவாஞ்சேரி பேரூராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு, பாமகவினர் திடீர் ஆர்ப்பாட்டம்

கூடுவாஞ்சேரி பேரூராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு, பாமகவினர் திடீரென ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்

Update: 2021-07-01 13:15 GMT

கூடுவாஞ்சேரி பேரூராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு பாட்டாளி மக்கள் கட்சியினர் ஆர்ப்பாட்டம் செய்தனர்.

செங்கல்பட்டு மாவட்டம் கூடுவாஞ்சேரி பேரூராட்சி அலுவலகம் முன்பு பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் தினந்தோறும் குடிநீர் வழங்க கோரியும், பாழடைந்த தெரு மின்விளக்குகள் மாற்றக் கோரியும், பாட்டாளி மக்கள் கட்சியின் மாவட்டச் செயலாளர் காரணை இராதாகிருஷ்ணன் தலைமையில் முற்றுகை போராட்டம் நடைபெற்றது.

இந்த போராட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக பாட்டாளி மக்கள் கட்சியின் மாநில துணைப் பொதுச் செயலாளருமான திருக்கச்சூர் ஆறுமுகம் கலந்துகொண்டு கண்டன உரையாற்றினர். பேரூராட்சி நிர்வாகத்தை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடததினர்.

மேலும் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என பேரூராட்சி அதிகாரி ரவியிடம் மனு அளித்தனர்.

இந்த போராட்டத்தில் பேரூராட்சி செயலாளர் கணபதி, மாவட்ட துணை தலைவர் தேவராஜ், மாவட்ட பொருளாளர் செல்வி கிருஷ்ணமூர்த்தி, வழக்கறிஞர் அணி மாநிலத் துணைத் தலைவர் ஜெயராமன் மற்றும் நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள்  கலந்துகொண்டனர்.

Tags:    

Similar News