முன்னாள் பாமக நகர தலைவருக்கு வெட்டு

முன்பகை காரணமாக செங்கல்பட்டில் முன்னாள் பாமக நகர தலைவருக்கு அரிவாள் வெட்டு. மருத்துவமனையில் அனுமதி

Update: 2021-04-05 23:45 GMT

செங்கல்பட்டு ராமபாளையம் பகுதியை சேர்ந்தவர் சத்யா.இவர் பாமகவில் நகர தலைவராக இருந்துள்ளார். தற்போது சிட்லபாக்கம் நகராட்சியில் துப்புரவு பணியாளராக பணியாற்றி வருகிறார். இவர் செங்கல்பட்டு பகுதியில் பன்றி வளர்த்து வந்துள்ளார். பன்றிகளை பண்ணையில் வளர்க்காமல் பொதுவெளியில் பன்றிகளை மேய விடுவதும் அவை வளர்ந்த பின் அதை விற்றும் வந்தார்.

இந்நிலையில் படப்பை பகுதியில் அதிகளவு பன்றிகள் இருப்பதைப் பார்த்த சத்யா அவற்றையும் பிடித்து விற்று வந்துள்ளார். இதன் காரணமாக அப்பகுதியில் உள்ள சிலருடன் முன்பகை இருந்து வந்துள்ளது. இந்நிலையில் இன்று தன்னுடைய வீட்டின் வெளியேஇருக்கும்போது 10 பேர் கொண்ட மர்ம கும்பல் அவரை மடக்கி அரிவாளால் வெட்டி விட்டு தப்பி ஓடினர். இதில் படுகாயமடைந்து  ரத்த வெள்ளத்தில் சரிந்த சத்யாவை அக்கம்பக்கத்தினர் மீட்டு செங்கல்பட்டு அரசு தலைமை மருத்துவமனையில் சேர்த்தனர்.

போலீசார் வழக்கு பதிவு செய்து முன் பகையின் காரணமாக இந்த தாக்குதல் நடந்ததா அல்லது வேறு ஏதாவது காரணமா என்ற கோணத்தில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags:    

Similar News