நோயாளிகள் அவசர ஊர்தியில் காத்திருப்பு

செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் ஆக்சிஜன் படுக்கைகள் இல்லாததால் நோயாளிகள் நீண்ட வரிசையில் அவசர ஊர்தியில் காத்திருப்பு

Update: 2021-05-17 12:15 GMT

செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் கொரோனா நோயாளிகளின் வருகை அதிகரித்துள்ளது. மருத்துவமனையில் மொத்தம் 480-படுக்கைகள் உள்ளது. இதில் 325- படுக்கைகளில் ஆக்ஸிஜன் வசதி உள்ளது. மீதமுள்ள 155 படுக்கைகள் சாதாரண நிலையில் உள்ளது.

இந்நிலையில் மருத்துவமனையில் ஆக்சிஜன் வசதி உள்ள 325- படுக்கைகளும் நிரம்பியது. இதனால் செங்கல்பட்டு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்துள்ள நோயாளிகள் அவசர ஊர்திகளில் வெளியே காத்திருக்கும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

மூச்சுத்திணறல் காரணமாக நோயாளிகள் மயக்கமடைந்து மருத்துவமனையின் வாயிலிலும், மரத்தடிகளிலும் படுக்க வைக்கப்பட்டுள்ளனர். இதுகுறித்து கேட்டபோது மருத்துவமனை நிர்வாகம் முறையான பதில் அளிக்க மறுப்பதாக நோயாளிகளின் உறவினர்கள் குற்றம் சாட்டுகின்றனர். தற்போது ஆக்சிஜன் படுக்கைகள் இல்லாத காராணமாக நீண்ட வரிசையில் காத்திருக்கும் அவசர ஊர்தி வாகனங்களில் நோயாளிகள் காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. மருத்துவர்கள் அவசர ஊர்தி வாகனங்களுக்கே சென்று சிகிச்சை அளித்து வருகின்றனர்

Tags:    

Similar News