செங்கல்பட்டு கலெக்டரிடம் தேசிய சிறுபான்மையர் மக்கள் நல இயக்கம் மனு

செங்கல்பட்டு மாவட்ட கலெக்டரிடம் தேசிய சிறுபான்மையர் மக்கள் நல இயக்கம் சார்பில் மனு அளிக்கப்பட்டு உள்ளது.

Update: 2022-01-24 13:00 GMT
செங்கல்பட்டு மாவட்ட கலெக்டரிடம் தேசிய சிறுபான்மையர் நல இயக்கம் சார்பில் மனு அளிக்கப்பட்டது.

செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தேசிய சிறுபான்மையர் மக்கள் நல இயக்கத்தின் மாநில துணை செயலாளர் சக்தி என்கிற ஸ்டீபன் புகார் மனு ஒன்றினை இன்று அளித்துள்ளார்.

அம்மனுவில் தமிழகத்தில் தொடர்ந்து கிறிஸ்தவர்கள் சில மத வெறியர்களால் தாக்கப்படுவது தொடர்கதையாகி வருகிறது. இதனை தமிழக அரசு உடனடியாக தடுத்து நிறுத்தவேண்டும். தமிழகத்தில் கிறிஸ்தவ கல்லறை இடுகாடுகள் இல்லாமல் உள்ளது. மேலும் பிற மதத்தவர் இடுகாடுகளில் கிறிஸ்தவ பிரேதத்தை கொண்டுசெல்லும்போது பிரச்சனைகள் ஏற்படுகிறது. எனவே தமிழகத்தில் உள்ள சிறுபான்மை கிறிஸ்தவர்களுக்கு அரசின் அனைத்து சலுகைகளும் கிடைக்க உரிய நடவடிக்கை மேற்கொள்ளவேண்டும் என  கூறப்பட்டுள்ளது.

Tags:    

Similar News