பன்முக கலைஞர்களுக்கான போட்டி: செங்கல்பட்டு தமிழாசிரியைக்கு முத்தமிழ் விருது!

கலைஞர் பிறந்தநாளை முன்னிட்டு நடத்தப்பட்ட பன்முக கலைஞர்களுக்கான போட்டியில் செங்கல்பட்டு தமிழாசிரியைக்கு முத்தமிழ் விருது வழங்கப்பட்டது.

Update: 2021-06-05 08:22 GMT

முத்தமிழ் விருது பெற்ற தமிழ் ஆசிரியை.

தமிழக முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதியின் பிறந்தநாளை முன்னிட்டு, பசுமைவாசல் பவுண்டேஷன்,, காருண்யம் டிரஸ்ட் மற்றும் ஒளிச்சுடர் சேவா டிரஸ்ட் உள்ளிட்ட ஏராளமான அமைப்புகள், இணையவழி மூலம்  பன்முக கலைஞர்களுக்கான போட்டி நடத்தப்பட்டது.

இதில், செங்கல்பட்டு அனுமந்தபுரம் அரசுப் பள்ளி தமிழாசிரியை சீதளாதேவிக்கு சிறந்த தமிழ்ப்பணி ஆற்றியமைக்காக கலைஞரின் "முத்தமிழ் விருது" வழங்கி கவுரவிக்கப்பட்டது.

செங்கல்பட்டு மாவட்டம் மறைமலை நகரில் வசித்துவரும் இந்த ஆசிரியை, தனது வாழ்நாட்களில் வாசிப்பை மட்டுமே சுவாசித்து வருகிறார். இதுவரை 30 ஆயிரம் நூல்களைப் படித்து, அதற்கான குறிப்புகளையும் எடுத்து வைத்துள்ளார். மேலும் இவர், கவிதாயினி, சித்தாந்த ரத்தினம், சித்தாந்த நன்மணி உள்ளிட்ட பல்வேறு பட்டங்களை பெற்றிருப்பவர் என்பது குறிப்பிடத்தக்கது. 

Tags:    

Similar News