உள்ளாட்சி தேர்தல் குறித்து அதிமுக ஆலோசனை கூட்டம்

உள்ளாட்சி தேர்தல் குறித்து அதிமுக ஆலோசனை கூட்டம்

Update: 2021-08-12 06:30 GMT

செங்கல்பட்டு அதிமுக சார்பில் நடந்த உள்ளாட்சி தேர்தல் ஆலோசனை கூட்டம்.

செங்கல்பட்டு மாவட்டம், ஊரப்பாக்கத்தில் அதிமுக நிர்வாகிகள் பங்கேற்ற உள்ளாட்சித் தேர்தல் தொடர்பான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

ஊரப்பாக்கம் இரயில் நிலையம் அருகே உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்ற இக்கூட்டத்திற்கு அதிமுக மேற்கு மாவட்ட செயலாளர் சிட்லப்பாக்கம் இராஜேந்திரன் தலைமை தாங்கினார்.

கூட்டத்தில் முதலாவதாக மறைந்த முன்னாள் முதல்வர்கள் எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதா ஆகியோருக்கு கட்சியின் நிர்வாகிகள் மலர்தூவி அஞ்சலி செலுத்தினர். அதனை தொடர்ந்து, விரைவில் நடைபெறவுள்ள உள்ளாட்சித் தேர்தலில் அதிமுக வேட்பாளர்களை வெற்றி பெற வைப்பது குறித்து கூட்டத்தில் ஆலோசனை நடத்தப்பட்டது. இதில் அதிமுக ஒன்றிய கவுன்சிலர்கள், வார்டு செயலாளர்கள், ஊராட்சி நிர்வாகிகள் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News