வண்டலூர் பூங்காவில் பெண் சிங்கம், 5 நெருப்பு கோழிகள் திடீர் பலி

வண்டலூர் பூங்காவில், வயது முதிர்வின் காரணமாக பெண் சிங்கம் ஒன்றும், 5 நெருப்பு கோழிகளும் உயிரிழந்தன.

Update: 2021-10-28 04:30 GMT

கோப்பு படம்

செங்கல்பட்டு மாவட்டம், வண்டலூரில் உயிரியல் பூங்கா உள்ளது. இங்கு, நேற்று முன் தினம்,  வயது முதிர்வின் காரணமாக கவிதா என்ற 19வயது பெண் சிங்கம் உயிரிழந்துள்ளது. சில மாதங்களாகவே உடல் நிலை சரியில்லாமல், அது இருந்தது குறிப்பிடத்தக்கது. 

அதேபோல்,  நேற்று 5 நெருப்புக்கோழிகளும் உயிரிழந்துள்ளன. 5 நெருப்பு கோழிகளும் ஒரேநாளில் உயிரிழந்துள்ளதால், இறப்பிற்கான காரணம் குறித்து அறிந்து கொள்ள, பூங்கா நிர்வாகம் சார்பில் அவற்றை பிரேத பரிசோதனை செய்துள்ளனர். அதன் முடிவுகள் வந்ததும் உயிரிழப்பிற்கான தகவல் தெரியவரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Tags:    

Similar News