மின்சாரம், இடுகாடு இல்லை; 45 ஆண்டுகாளாக போராடும் தொழுநோயாளிகள்

செங்கல்பட்டு அருகே மின்சாரம், இடுகாடு வசதிகள் இல்லாததால் 45 ஆண்டுகாளாக தொழுநோயாளிகள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

Update: 2021-07-17 21:00 GMT

செங்கல்பட்டு அடுத்த வல்லம் கிராமம் கல்வாரி நகர் பகுதியில் வசித்து வரும் 200க்கும் மேற்பட்ட தொழுநோயாளிகள்.

செங்கல்பட்டு அடுத்த வல்லம் கிராமம் கல்வாரி நகர் பகுதியில் 200க்கும் மேற்பட்ட தொழுநோயாளிகள் கடந்த 45 ஆண்டுகளாக வசித்து வருகின்றனர். தொழுநோயாளிகள் வசித்து வரும் பகுதியில் இந்த பகுதியில் போதிய அடிப்படைகளான மின்சாரம், இடுகாடு வசதிகள் இல்லாத காரணமாக கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

இதுகுறித்து அப்பகுதியில் வசிக்கும் தொழுநோயாளிகள் கூறியதாவது:- கடந்த 45 வருடங்களுக்கும் மேலாக தொழுநோயாளிகள் வல்லம் அருகே மலைப்பகுதி அருகில் கல்வாரி நகர் பகுதியில் வசிக்கிறோம். எங்களுக்கென்று தனி சுடுகாடு இதுவரை இல்லை. மின்வசதி இல்லை.

நோய்வாய்ப்பட்டு உயிரிழக்கும் நபர்களின் உடல்களை மலையடிவாரத்தில் புதைத்து வருகிறோம். தொடர்ந்து மலை அடிவாரத்தில் இறந்தவர்களின் உடல்களை புதைக்க செங்கல்பட்டு வன அதிகாரிகள் மறுப்பு தெரிவித்து வருகின்றனர்.

எங்களுக்கென தனியாக இடுகாடு அமைத்து தர வேண்டும். கல்வாரி நகர் பகுதியில் குடிநீர், மின்சாரம், சுடுகாடு உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து தர வேண்டும் என மாவட்ட நிர்வாகத்துக்கு தொழுநோயாளிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

Similar News