சட்டப்பணிகள் குறித்த விழிப்புணர்வு பிரச்சார வாகனம்

சட்டப்பணிகள் குறித்து விழிப்புணர்வு பிரச்சார வாகனத்தை மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு தலைவர் கொடியசைத்து துவக்கி வைத்தார்

Update: 2021-10-21 10:45 GMT

விழிப்புணர்வு வாகனத்தை மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு தலைவர்  திருமதி பேவிஸ்தீபிகா சுந்தர வதனா கொடியசைத்து துவக்கி வைத்தார்

தேசிய சட்டப் பணிகள் ஆணைக்குழு மற்றும் மணிலா சட்டப்பணிகள் ஆணைக்குழு இணைந்து நடத்தும் பான் இந்தியா அவேர்னஸ் அண்ட் அவுட் ரீச் விழாவின் ஒரு பகுதியாக செங்கல்பட்டு மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் இருந்து சட்டப்பணிகள் குறித்து விழிப்புணர்வு பிரச்சார வாகனத்தில் முதன்மை மாவட்ட நீதிபதியும் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு தலைவருமான திருமதி பேவிஸ்தீபிகா சுந்தர வதனா கொடியசைத்து துவக்கி வைத்தார்.

இந்த நிகழ்ச்சியில் குற்றவியல் நடுவர் நீதிபதி மகிலா நீதிபதி முதன்மை நடுவர் நீதிபதி முன்சீப் குற்றவியல் நீதிபதி ஐ குற்றவியல் நீதிபதி ஐ.ஐ செயலாளர் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு மற்றும் வழக்கறிஞர்கள் கலந்து கொண்டனர்

Tags:    

Similar News