செங்கல்பட்டு மாவட்டத்தில் 451 ஏரிகள் 100% முழுமையாக நிரம்பின

செங்கல்பட்டு மாவட்டத்தில், 451 ஏரிகள் 100% முழுமையாக நிரம்பி உள்ளன.

Update: 2021-11-19 03:00 GMT

செங்கல்பட்டு மாவட்டத்தின் பல பகுதிகளில் மிதமான மழையும், ஒரு சில பகுதிகளில் இடியுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது. இந்த மழையின் காரணமாக பொதுமக்கள் இயல்பு வாழ்க்கை மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. ஒரு சில விவசாய பகுதிகளில் விளை நிலங்கள் நீரில் மூழ்கி பாதிக்கப்பட்டது.

தொடர் மழையின் காரணமாக,  மாவட்டத்தில் உள்ள ஏரி மற்றும் குளங்களுக்கு நீர்வரத்து ஏற்பட்டுள்ளது. செங்கல்பட்டு மாவட்டத்தில் பொதுப்பணித்துறைக்கு சொந்தமான 528 ஏரிகள் உள்ளது. இதில் 451 ஏரிகள் 100% முழுமையாக நிரம்பி உள்ளன.75 சதவீதத்துக்கு மேல் 72 ஏரிகளும் 50 சதவிகிதத்திற்கு மேல் 3 ஏரிகளும் 25 சதவீதத்துக்கு மேல் 2 ஏரிகளும் நிரம்பி உள்ளதாகவும், மேலும் ஏரிகளின் நீர்வரத்தை தீவிரமாக கண்காணித்து வருவதாக பொதுப்பணித்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Tags:    

Similar News