செங்கல்பட்டு மாவட்டத்தில் இன்று 1,215 பேருக்கு கொரொனா 5 பேர் பலி

செங்கல்பட்டு மாவட்டத்தில் இன்று 1,215 பேர் கொரொனாவால் பாதிப்படைந்துள்ளனர். இன்று ஒரேநாளில் 5 பேர் இறந்தனர்.

Update: 2021-04-30 14:30 GMT

செங்கல்பட்டு மாவட்டத்தில் இன்று 1,215 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். மாவட்டம் முழுவதும் இதுவரை பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 79 ஆயிரத்து 972 ஆக உயர்ந்துள்ளது. இவர்களில் 70 ஆயிரத்து 544 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பினர்.

சிகிச்சை பலனின்றி இன்று ஒரே நாளில் 5 பேர் உயிரிழந்தனர். இதனால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 943 ஆக உயர்ந்தது. இதில் 9 ஆயிரத்து 432 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Tags:    

Similar News