குடும்பத் தகராறில் கணவன், மனைவி தூக்கிட்டுத் தற்கொலை

செங்கல்பட்டில் குடும்பத் தகராறில் கணவன்-மனைவி இருவரும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டனர்.

Update: 2021-05-15 06:43 GMT

செங்கல்பட்டு தூக்குமரக்குட்டை பகுதியைச் சேர்ந்த கோபி வயது38 அதே பகுதியில் இறைச்சிக்கடை நடத்திவருகிறார். அவரது மனைவி கன்னியம்மாள் வயது32 இவர்களுக்கு மஞ்சுப்பிரியா என்ற ஒரு மகள் உள்ளார்.

இந்நிலையில், கணவன்-மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. நேற்று இரவு கனவன் மனைவிக்குள் கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. பின்னர் இன்று அதிகாலை கணவன் மனைவி ஆகிய இருவரும் வீட்டுக்குள் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.

காலை தூங்கி எழுந்த இவர்களது மகள் தாய் தந்தை இருவரும் தூக்கில் தொங்கியதை பார்த்து அலறியடித்துபக்கம் பக்கதினரை அழைத்துள்ளார். பின்னர் அங்குள்ளவர்கள் நகர காவல்துறையினருக்கு தகவல் அளித்ததில் பேரில் அங்கு சென்ற போலீசார் உடலை கைபற்றி உடற்கூறு ஆய்விற்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

Tags:    

Similar News