செங்கல்பட்டு தபால் நிலையத்தில் இந்து மக்கள் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
சிறுபான்மை கல்வி நிறுவனங்களை அரசுடைமையாக்க வலியுறுத்தி செங்கல்பட்டு தபால் நிலையத்தில் இந்து மக்கள் கட்சியினர் ஆர்ப்பாட்டம் செய்தனர்.
செங்கல்பட்டு தலைமை தபால் நிலையத்தில் இந்து மக்கள் கட்சியின் மாவட்டத் தலைவர் சண்முகம் தலைமையில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்தில் தமிழகம் முழுவதும் புதிய கல்விக் கொள்கையை உடனடியாக தமிழக அரசு செயல்படுத்த வேண்டும் .மேலும் சிறுபான்மைனயினர் கல்வி நிறுவனங்களை அரசுடமையாக்க வேண்டும் என இந்து மக்கள் கட்சியினர் வலியுறுத்தினர்.