செங்கல்பட்டில் ஹலோ போலீஸ் எண் அறிவிப்பு: புதிய எஸ்.பி எச்சரிக்கை

செங்கல்பட்டு மாவட்ட காவல்துறை சார்பில் குற்றச்செயல்களை தடுக்க 'ஹலோ' போலீஸ் எண் அறிவிக்கப்பட்டுள்ளது.#

Update: 2021-12-21 02:23 GMT

செங்கல்பட்டு மாவட்ட காவல்துறை சார்பில் குற்றச்செயல்களை தடுக்க 'ஹலோ' போலீஸ் எண் அறிவிக்கப்பட்டுள்ளது.

செங்கல்பட்டு மாவட்ட காவல்துறை சார்பில் குற்றச்செயல்களை தடுக்க 'ஹலோ' போலீஸ் எண் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து மாவட்ட காவல்துறை சார்பில் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:- மாவட்டத்தில் யாரேனும் ரௌடிசத்தில் ஈடுபட்டாலோ, சட்ட விரோதமாக மணல் கடத்தல், சாராய விற்பனை, கஞ்சா விற்பனை, மற்றும் லாட்டரி விற்பனை போன்ற செயல்களில் ஈடுபட்டாலோ, கள்ளச்சாராயம், ஊறல், எரிச்சாராயம் ஆகியவற்றை விற்பனை செய்யும் செயல்களில் ஈடுபட்டாலோ அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் பெண்கள், பெண் குழந்தைகளுக்கு பாதுகாப்பு அளிப்பது அது தொடர்பான முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்வது, பெண்களுக்கு எதிரான குற்றங்களுக்கு கடும் நடவடிக்கை எடுப்பது அக்கரை செலுத்துவது போன்ற நடவடிக்கைகள் விரைந்தும், துரிதமாகவும் இருக்கும் என மாவட்டகாவல் கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

பொதுமக்கள் சட்ட விரோத செயல்கள் தொடர்பாக ஹலோ போலீஸ் எண். (7200102104) என்ற எண்ணுக்கு உடன் தகவல் அளிக்களாம், தகவல் அளிப்பவர்களின் இரகசியங்கள் காக்கப்படும் எனவும் மாவட்ட காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News