கூடுவாஞ்சேரி போலீசார் எமன் வேடமணிந்து விழிப்புணர்வு பிரசாரம்

கூடுவாஞ்சேரி போலீசார் கொரோனா தொற்று பரவலை தடுக்க எமன் வேடமணிந்து விழிப்புணர்வு பிரசாரம் செய்தனர்.

Update: 2021-05-12 20:00 GMT

செங்கல்பட்டு மாவட்டம் கூடுவாஞ்சேரி காவல் நிலையம் சார்பில் கொரோனா தொற்று பரவலை தடுக்க, நாடக கலைஞர்கள், எமன் வேடமணிந்து, பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

கூடுவாஞ்சேரியில் போலீசார் சார்பில் கொரோனா தொற்று பரவலை தடுக்க, விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது. கூடுவாஞ்சேரி இன்ஸ்பெக்டர் அசோகன் தலைமை வகித்தார். இதில் நாடக கலைக்குழுவினர், எமன், மற்றும் சித்திரகுப்தன் வேடமணிந்து, சாலையில் சென்ற வாகன ஓட்டிகளுக்கு, முகக்கவசம் வழங்கி, ஹெல்மெட் அணிவதன் அவசியம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.

தொடர்ந்து, பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகளுக்கு, கபசுர குடிநீர் மற்றும் முகக்கவசம் அனைவருக்கும் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் போக்குவரத்து காவலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News