கூடுவாஞ்சேரி அருகே கோவில் நிர்வாகி மீது தாக்குதல்: திமுக பிரமுகர் கைது!

கூடுவாஞ்சேரி அருகே கோவில் நிலத்தை ஆக்கிரமித்ததை தட்டிக்கேட்ட கோவில் நிர்வாகி மீது தாக்குதல் நடத்தியதாக திமுக பிரமுகர் கைது செய்யப்பட்டார்.

Update: 2021-06-12 05:45 GMT

செங்கல்பட்டு மாவட்டம் கூடுவாஞ்சேரி அடுத்த தைலாவரம் கிராமத்தில் உள்ள அம்பேத்கர் தெருவில் அங்காளம்மன் கோவிலுக்கு சொந்தமான இடம் உள்ளது இக்கோவிலை கண்ணன் என்பவர் நிர்வாகம் செய்து வந்துள்ளார். இந்தக் கோவில் அருகே உள்ள நிலத்தில் திமுக பிரமுகரான சுந்தர் என்பவர் நீண்ட வருடங்களாக வசித்து வந்துள்ளார்.

இந்நிலையில் கோவில் நிலத்தை சுந்தர் ஆக்கிரமிப்பு செய்து சுற்றுச்சுவர் அமைத்ததாகவும், இதனால் கோவில் நிர்வாகி சுந்தரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாகவும் தெரியவந்தது.

இதனால் ஆத்திரமடைந்த திமுக உறுப்பினர் சுந்தர், தனது நண்பர்கள் 3 பேரை வரவழைத்து கோவில் நிர்வாகியை சரமாரியாக  தாக்கியுள்ளார். அதில் படுகாயமடைந்த கோவில் நிர்வாகி கண்ணனை அக்கம்பக்கத்தினர் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் செங்கல்பட்டு தலைமை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது

இதுபற்றி தகவல் அறிந்த கூடுவாஞ்சேரி காவல் துறையினர், திமுக உறுப்பினர் சுந்தரை கைது செய்து அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஏற்கனவே திமுக உறுப்பினர் சுந்தர் மீது கொலை மற்றும் கொள்ளை என 10க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது

Tags:    

Similar News