செங்கல்பட்டில் கொரொனாவை வரவேற்க்கும் அரசு பேருந்துகள், பொதுமக்கள் அலட்சியம்

செங்கல்பட்டு அரசு பேருந்துகளில் அளவுக்கு அதிகமான பயணிகள் பயணம் செய்வதால் கொரோனா தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

Update: 2021-06-25 04:41 GMT

செங்கல்பட்டில் கொரோனா விதிகளை மீறி, தொற்றின் பயம் அறியாமல் ,அரசு பஸ்சில் பயணம் செய்யும் பயணிகள்.

செங்கல்பட்டு மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கொரொனா தொற்று தொடர் சரிவை சந்தித்து வருகிறது. இதன் காரணமாக ஏராளமான தளர்வுகள் அளிக்கப்பட்டு கடந்த இரு தினங்களாக அரசு பேருந்து சேவை தொடங்கப்பட்டுள்ளது.

இதில் அரசு அறிவித்துள்ள வழிகாட்டு நெறிமுறைகளை கடைபிடித்து பேருந்துகளில் பயணிக்கும் பயணிகளுக்கு முக கவசம் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

50 சதவிகித இரு கைகளுடன் தனி மனித இடைவெளியையை பின் பற்றி பயணிகள் பயணிக்கலாம் என்று, அரசு அறிவித்திருந்தது.

இந்தநிலையில் இன்று செங்கல்பட்டிலிருந்து காஞ்சிபுரம், தாம்பரம், மதுராந்தகம், திருப்போரூர், மாமல்லபுரம், உள்ளிட்ட ஊர்களுக்கு செல்லும் அரசுப் பேருந்துகளில் பயணிகள் கூட்டம் அலைமோதியது.

இதன் காரணமாக கொரொனா தொற்று அதிவேகத்தில் பரவக்கூடிய வாய்ப்புகள் உள்ளதாகவும், சக பயணிகள் கூறுகின்றனர்.

எனவே அரசு சிறப்பு கவனம் செலுத்தி கொரொனா தடுக்கும் வகையில் அதிக அளவிலான பேருந்துகளை இயக்க கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

Similar News