சத்தியசாய் சேவா நிறுவனம் சார்பில் இலவச மருத்துவ முகாம்

செங்கல்பட்டு மாவட்டம் பெருந்தண்டலத்தில், சத்தியசாய் சேவா நிறுவனம் சார்பில் இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது.

Update: 2021-10-23 04:45 GMT

பெருந்தண்டலம் அரசு நடுநிலைப்பள்ளியில் நடைபெற்ற மருத்துவ முகாம். 

சத்தியசாய் சேவா நிறுவனம் மற்றும் சென்னை மெட்ரோ கிழக்கு கடற்கரை மாவட்டம் இணைந்து, சனிக்கிழமை இலவச பியோதெரப்பி மருத்துவ முகாம், செங்கல்பட்டு மாவட்டம் பெருந்தண்டலம் அரசு நடுநிலைப்பள்ளியில் நடைபெற்றது.

பொது மக்கள் நலனுக்காகவும், இளைஞர்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காகவும், இந்த முகாம் நடத்தப்பட்டது. சத்திய சாய் சேவா நிறுவன மாவட்ட தலைவர் பிரபு தலைமையில், கிராம ஒருங்கிணைப்பாளர் ராஜ்குமார், முன்னிலையில் நடைபெற்றது.

மருத்துவ முகாமில்,  பொது மருத்துவம், பல் மருத்துவம்,   பிசியோதெரபி சிகிச்சை, ஊட்டச்சத்து மற்றும் உணவியல் குறித்த மருத்துவ ஆலோசனைகளை,  இயல் முறை மருத்துவர் ஆனந்த் விக்னேஷ் பொதுமக்களுக்கு வழங்கினார். இம்முகாமில் பொதுமக்கள் பலர் பங்கேற்று பயனடைந்தனர்.  முகாமிற்கான ஏற்பாடுகளை,  ஆனந்தவேலு செய்திருந்தார்.

Tags:    

Similar News