செங்கல்பட்டில் போலீஸ், துணை ராணுவத்தினர் கொடி அணிவகுப்பு
தேர்தலையொட்டி செங்கல்பட்டில் போலீஸ், துணை ராணுவத்தினர் சாலைகளில் கொடி அணிவகுப்பு நடத்தினர்
செங்கல்பட்டு மாவட்டத்தில் சட்ட பேரவைத் தேர்தல் அமைதியாக நடைபெறவும், பொதுமக்கள் அச்சமின்றி வாக்களிக்கவும் ஏ.எஸ்.பி ஆதர்ஸ்பசேரா தலைமையில் போலீஸாரின் அணிவகுப்பு நடைபெற்றது. இந்த அணிவகுப்பில் மத்திய துணை ராணுவப் படையினர் மற்றும் செங்கல்பட்டு போலீசார் என 100க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம் அருகே புறப்பட்ட அணிவகுப்பு முக்கிய சாலைகளான, ஜி.எஸ்.டி சாலை, குண்டூர், இராட்டிணகிணறு, ராம பாளையம் வடமலை பள்ளி வழியாக லிட்டில் ஜாக்கி பள்ளி சென்றடைந்தது.
மக்கள் அச்சமின்றி வாக்களிக்கும் வகையில் போலீஸார் அணி வகுப்பு நடைபெற்றது பொதுமக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது