செங்கல்பட்டு மாவட்ட விவசாயிகள் குறைதீர் கூட்டம் 24ம் தேதி நடைபெறும்

செங்கல்பட்டு மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் வருகின்ற 24.12.2021 அன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற உள்ளது

Update: 2021-12-21 09:15 GMT

செங்கல்பட்டு கலெக்டர் ராகுல் நாத் 

செங்கல்பட்டு மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் வருகின்ற 24.12.2021 வெள்ளிக்கிழமை அன்று காலை 11.00 மணியளவில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெற உள்ளது.

செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள அனைத்து விவசாயிகளும் இக்கூட்டத்தில் கலந்து கொள்ளும் வண்ணம் தகுந்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

எனவே, செங்கல்பட்டு மாவட்ட விவசாயிகள் இக்கூட்டத்தில் முகக்கவசம் அணிந்து, சமூக இடைவெளி விட்டு கலந்து கொண்டு விவசாயம் தொடர்புடைய கோரிக்கைகளை மட்டும் தெரிவித்து பயன்பெறலாம் என்று கலெக்டர் ஆ.ர.ராகுல் நாத் தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News