செங்கல்பட்டில் இல்லம் தேடி கல்வித்திட்டம் துவக்கி வைப்பு
செங்கல்பட்டில் இல்லம் தேடி கல்வித்திட்டத்தை, மாவட்ட ஆட்சியர் ராகுல் நாத் துவக்கி வைத்தார்
செங்கல்பட்டு பழைய பேருந்து நிலையம் அருகே உள்ள புனித சூசையப்பர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில், பள்ளிக்கல்வித்துறை சார்பில் இல்லம் தேடி கல்வி விழிப்புணர்வு நிகழ்சி நடைபெற்றது. இல்லம் தேடி, கல்வி கலை பயணத்தினை, செங்கல்பட்டு சட்டமன்ற உறுப்பினர் வரலட்சுமி மதுசூதனன் முன்னிலையில், மாவட்ட ஆட்சியர் ராகுல் நாத் துவக்கி வைத்தார்.
இந்நிகழ்ச்சியில், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ரோஸ் நிர்மலா மேரி, உதவி திட்ட அலுவலர் பிரபாகரன், மாவட்ட கல்வி அலுவலர்கள், மற்றும் வட்டார கல்வி அலுவலர்கள், பள்ளி தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.