தொண்டு நிறுவனம் சார்பில் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு இலவச பாட புத்தக கையேடு வழங்கல்

ரவுன்ட் டேபிள் இந்தியா தொண்டு நிறுவனம் சார்பில் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு இலவச பாட புத்தக கையேடுகள் வழங்கப்பட்டது

Update: 2022-03-01 05:00 GMT

செங்கல்பட்டு மாவ்டடம் ஊரப்பாக்கத்தில் உள்ள ஆதிதிராவிடர் நலன் அரசுப்பள்ளியில் மாணவ மானவியருக்கு இலவச பாட புத்தக கையேடுகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

செங்கல்பட்டு மாவ்டடம், ஊரப்பாக்கத்தில் உள்ள ஆதிதிராவிடர் நலன் அரசுப்பள்ளியில் மாணவ மானவியருக்கு இலவச பாட புத்தக கையேடுகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

ரவுன்ட் டேபிள் இந்தியா தொண்டு நிறுவன நிர்வாகிகள் சந்தோஷ்ராஜ் மற்றும் சந்தீஷ் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் சிறப்புஅழைப்பாளராக தேசியத்தலைவர் மொரியாபிலிப் கலந்து கொண்டு மாணவர்களிடையே கலந்துரையாடினார். மேலும் 1500 மாணவ மாணவிகளுக்கு பாடபுத்தகங்கள் மற்றும் கையேடுகளை வழங்கினர்.

மேலும் ரவுன்ட் டேபிள் இந்தியா தொண்டு நிறுவனம் சார்பில் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு இலவச ஸ்மார்ட் கிளாஸ், மற்றும் சிறப்பு வகுப்புகளுக்கான புதிய கட்டிடம் விரைவில் திறக்கப்பட இருக்கிறது. அக்கடித்தையும் அவர்கள் பார்வையிட்டனர். இந்நிகழ்வில் பள்ளி மாணவர்கள், பெற்றோர்கள், அரசுப்பள்ளி ஆசிரியர்கள் என பலர் கலந்துகொண்டனர்.

Tags:    

Similar News