குடியிருப்புக்குள் புகுந்த முதலை: பூங்கா நிர்வாகத்தினர் மீட்பு

தாம்பரம் அடுத்த கொளப்பாக்கம் ஏரியின் அருகில், குடியிருப்புக்குள் புகுந்த முதலை பூங்கா நிர்வாகத்தினர் பிடித்துச் சென்றனர்.

Update: 2022-03-16 04:30 GMT

குடியிருப்பு பகுதியில் புகுந்த முதலை. 

சென்னை தாம்பரம் அடுத்த கொளப்பாக்கம் ஏரியின் அருகில் வரபிரசாத் நகர் உள்ளது. இங்கு, நள்ளிரவில் முதலை ஒன்று குடியிருப்பு பகுதிக்குள் வந்துள்ளது.  முதலை தெருக்களில் ஊர்ந்து கொண்டிருப்பதை பார்த்த நாய்கள் தொடர்ந்து குரைத்து கொண்டிருந்தன.

சத்தத்தை கேட்டு அப்பகுதி மக்கள் வெளியில் வந்து பார்த்தபோது,  முதலை ஒன்று இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர். இது குறித்து,  காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கொடுத்து, பின்னர் போலீசார் வந்து வண்டலூர் பூங்கா நிர்வாகத்திடம் தெரியபடுத்தினர். வண்டலூர் பூங்கா நிர்வாகத்தினர் முதலை பிடித்து எடுத்து சென்றனர். 

Tags:    

Similar News