பொத்தேரி தனியார் கல்லூரியில் கொரோனா தடுப்பூசி முகாம்: கலெக்டர் துவக்கிவைத்தார்

பொத்தேரி தனியார் கல்லூரியில் நடந்த கொரோனா தடுப்பூசி முகாமை கலெக்டர் ராகுல் நாத் துவக்கி வைத்தார்.

Update: 2021-08-04 12:45 GMT

பெத்தேரி தனியார் கல்லூரியில் நடந்த கொரோனா தடுப்பூசி முகாமை கலெக்டர் ராகுல்நாத் தொடங்கி வைத்து பேசினார்.

செங்கல்பட்டு மாவடம் பொத்தேரி எஸ்.ஆர்.எம் பல்கலை கழகத்தில் உள்ள உணவக மேளாண்மை கல்லூரியில் உணவு வணிகர்களுக்கு தடுப்பூசி முகாம் நடைபெற்றது.

செங்கல்பட்டு மாவட்ட பொது சுகாதாரம் மற்றும் நோய்தடுப்பு மருந்துத்துறை சார்பில் தனியார் நிறுவனங்கள், தனியார் கல்லூரிகளில் உள்ள பணியாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி முகாம்களை நடத்தி வருகின்றனர்.

இதன் ஒரு பகுதியாக செங்கல்பட்டு அடுத்த பொத்தேரியில் உள்ள உணவக மேளான்மை தனியார் கல்லூரியில் கொரோனா தடுப்பூசி முகாம் இன்று காலை நடைபெற்றது.

இதில் சிறப்பு அழைப்பாளராக செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் ஆ. ராகுல்நாத் கலந்துகொண்டு 200 பணியாளர்களுக்கு தடுப்பூசி செலுத்தும் முகாமினை துவக்கிவைத்தார்.

பின்னர் இந்நிகழ்ச்சியில் பேசிய மாவட்ட ஆட்சியர்:- கொரொனா தடுப்பூசி செலுத்திக்கொள்ள ஆர்வமுள்ளவர்கள் எந்நேரத்திலும் மாவட்ட ஆட்சியரகத்தை தொடர்புகொண்டு தகவல் தெரிவித்தால், அவர்களது பகுதிகளுக்கே வந்து நோய் தடுபுத்துறை சார்பில் தடுப்பூசிகளை செலுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும்,

நமது குறிக்கோள் நூறு சதவிகிதம் கொரோனா தடுப்புசி அனைவரும் செலுத்தி பெருந்தொற்றை தடுக்கவேண்டும். அதற்காக பொதுமக்கள் ஒத்துழைப்பு அளிக்கவேண்டும் என அவர் கூறினார்.

Tags:    

Similar News