செங்கல்பட்டு மாவட்டத்தில் ஒரே நாளில்,190 பேருக்கு கொரொனா
செங்கல்பட்டு மாவட்டத்தில் புதியதாக ஒரே நாளில், 190 பேருக்கு கொரொனா தொற்று கண்டறியப்பட்டது.
செங்கல்பட்டு மாவட்டத்தில் நேற்று நிலவரப்படி மொத்தம் பாதிப்பு எண்ணிக்கை 1,59,220 ஆக இருந்தது . இதை தொர்ந்து புதிதாக இன்று ஒரே நாளில்-190 பேருக்கு நோய்த் தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
இதனால் செங்கல்பட்டு மாவட்டத்தில் மொத்தம் நோய் தொற்றால்பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 1,59,410 ஆக உயர்ந்துள்ளது.
இதுவரை உயிரிழந்தோர் எண்ணிக்கை 2,373 ஆக உள்ளது. கடந்த 24 மணி நேரம் நிலவரப்படி உயிர் பலி எதுவும் இல்லை.
தற்போது சிகிச்சை பெற்று வரும் எண்ணிக்கை 1,368 ஆக குறைந்து உள்ளது. இதுவரையில் நோய்த் தொற்றில் இருந்து 1,55,479 பேர் நோயிலிருந்து மீண்டுள்ளனர்.