செங்கல்பட்டு மாவட்டத்தில் மேலும் 20 போலீசாருக்கு கொரோனா உறுதி

செங்கல்பட்டு மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் உள்பட, மேலும் 20 காவலர்களுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

Update: 2022-01-19 04:15 GMT

செங்கல்பட்டு மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அரவிந்தன்

இந்தியாவில் கொரோனா பரவல் அதிகம் பாதித்த பட்டியலில் தமிழகமும் இருக்கிறது. தினமும் நூற்றுக்கணக்கில் வந்த கொரோனா பாதிப்புகளின் எண்ணிக்கை, கடந்த சில நாட்களாக நாள் தோறும் சுமார் 23 ஆயிரத்தை தொட்டு வருகின்றது. உயிரிழப்புகளும் கணிசமாக உயர்ந்து வருகின்றன.

சமீப காலமாக கொரோனா தடுப்பு நடவடிக்கைகளின் முன்னணி வீரர்களான காவல்துறையினரும், மருத்துவர்களும், செவிலியர்களும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 200க்கும் மேற்பட்ட மருத்துவதுறை சார்ந்தவர்கள் மற்றும் இதர பணியாளர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில்,  இன்று செங்கல்பட்டு மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அரவிந்தன், காவல் துணை ஆதர்ஸ்பசேரோ உள்பட மேலும் 20 பேருக்கு,   கொரோனா பெருந்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நேற்று காவல் ஆய்வாளர்கள், உதவி ஆய்வாளர்கள், காவலர்கள் என 29 பேருக்கு கொரொனா பெருந்தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், தற்போது நடைபெற்ற பறிசோதனையின் முடிவில்,  20 பேருக்கு கொரொனா உறுதி செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

Tags:    

Similar News